#Breaking:”எப்படியாவது,இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்” -இந்திய தூதரகம் அவசர உத்தரவு!

Published by
Edison

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம்,டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக  பேசியதாகவும்,மேலும்,உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு,மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்  உடனே வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கீவ் பகுதியை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட முழுமையாக சூழ்ந்து விட்ட நிலையில்,ரயில்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் எப்படியாவது கீவ் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago