சென்னையில் காவல்நிலையத்தின் அருகிலேயே திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சம்பத்குமார்,நேற்று இரவு அண்ணாநகர் காவல்நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,எதிரே ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல்,காவல்நிலையம் அருகே சம்பத்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனால்,சம்பத் குமார், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த போலீசார் சம்பத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளிகள் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சம்பத்குமார் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும்,அவர் போலீஸ்க்கு தகவல் கொடுப்பவர் (இன்ஃபார்மர்) ஆகவும் இருந்து வந்துள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தைசேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் பதுங்கியிருந்த இடம் குறித்து காவல்துறைக்கு துப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து,அந்த ரவுடி கைது கைது செய்யப்பட்டதன் காரணமாகவே, சம்பத் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில்,தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே சம்பத் குமார், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…