கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம்.
கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில், 7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆய்வு ஒன்றில், முதல் கட்டமாக, கொரோனா வைரஸ் தாக்கம் குறிப்பிட்ட இரத்த வகைகளில் அதிகமாகவும், வேறு சில வகையில் குறைவாகவும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இன்னும் இந்த ஆய்வு நடைபெற்று வருவதால், முழுமையான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. முதல் கட்ட ஆய்வின்படி, ஏ, ஓ, பி ஆகிய இரத்த வகைகளுக்கு கொரோனா தாக்கம் மாறுபட்டு காணப்படுகிறது.
குறிப்பாக ஓ பிரிவு இராத வகையினருக்கு மற்ற பிரிவினரை விட, 9 முதல் 18% வரை கொரோனா தாக்குதல் குறைவாக இருந்துள்ளது. இந்த முடிவுகள் வயது, பாலினம் மற்றும் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக சீனாவில் நடைபெற்ற சோதனையில்,ஆராய்வு செய்ததில் ஓ பிரிவு இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு, மாற்றங் பிரிவு இரத்த வகையை விட குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் அனைத்து வகை இரத்த பிரிவு முடிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மேலும் நடைபெறவுள்ளதால், முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…