இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்..?

Published by
பால முருகன்

இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் சென்னையில் அதிகம் வசூல் செய்த 5 படங்களின் பட்டியல்.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் திறக்கப்பட்டு சில படங்கள் வெளியானது, வெளியானதில் ஒரு திரைப்படம் கூட நல்ல வசூல் கொடுக்கவில்லை. அதற்கு பிறகு மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களுக்கும் சினிமா திரைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது என்ற கூறலாம். இந்த படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகதஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தது இதனால் விஜய்யை வசூல் சர்க்ரவர்த்தி என்று அழைத்தனர்.

master 1

மேலும் மாஸ்டர் படம் வெளியானதை தொடர்ந்து, சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில ஒரு கலவையான விமர்சனத்தையும் பெற்றது. அதற்கு பிறகு திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு களத்தில் சந்திபோம், கபடதாரி, பாரிஸ் ஜெயராஜ், நானும் சிங்கிள் தான், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சென்னையில் முதல் நாளாக அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இதில் முதலிடத்தில் விஜயின் மாஸ்டர் படம் 1.21 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் நெஞ்சம் மறப்பதில்லை 34 லட்சம் வசூலிலும், மூன்றாவது இடத்தில் சக்ரா திரைப்படம் 31 லட்சமும் ஈஸ்வரன் திரைப்படம் 20 லட்சமும் பாரிஸ் ஜெயராஜ் படம் 15 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago