தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஜாகுவார் தங்கம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தகோபால், வங்கி கணக்குகளை ஜாகுவார் தங்கம் கையாளக் கூடாது என உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஜாகுவார் தங்கம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஜாகுவார் தங்கத்தின் எதிரணியை சேர்ந்த ஏ.எம். ரத்னம் உள்ளிட்ட 15 பேர், செயற்குழு கூட்டம் கூட்டியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஜாகுவார் தங்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தயாரிப்பாளர் ஏ.எம் .ரத்னம் உள்ளிட்ட 15 பேரும் இன்று ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…