அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச்சூடு…5 பேர் பரிதாப பலி…!!

Default Image

அமெரிக்க வங்கியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வங்கியில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கியை கொண்டு வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு இதே போல நடந்த தாக்குதல்களில் மட்டும் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் செப்ரிங் நகரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் புகுந்த 21 வயது இளைஞர் ஒருவர், தன் கையில் இருந்த துப்பாக்கியை வைத்து கொண்டு கண்மூடித்தனமாக சுட்டார்.

இந்த கொடூர  தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்