வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி உயிரிழப்பு.!

Default Image

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள் தான்,இதையெடுத்து பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு , 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியத்தில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி  கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மூதாட்டி தான் வாழ்ந்து முடித்து விட்டதால் தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என கூறி புறக்கணித்தார்.  வெண்டிலேட்டரை வேற இளைய நோயாளிகளுக்கு கொடுங்கள் என மருத்துவர்களிடம் அவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்