37 வருடங்களை தொட்ட  ‘முந்தானை முடிச்சு’.! ரீமேக் செய்வதில் மகிழ்ச்சி – சசிகுமார்.!

Published by
Ragi

கே. பாக்கியராஜ் அவர்களின் முந்தானை முடிச்சு வெளியாகி 37 வருடங்கள் ஆகிய நிலையில், அதன் ரீமேக்கில் நடிக்கும் சசிகுமார் பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏ. வி. எம். நிறுவனத்தின் தயாரிப்பில் 1983ம் பாக்கியராஜ் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தின் மூலம் ஊர்வசி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இளையராஜா இசையமைத்த இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கோவை சரளா, பூர்ணிமா பாக்கியராஜ், தவக்களை சிட்டிபாபு, கே. கே. சௌந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சமீபத்தில் இந்த படத்தினை 36வருடங்கள் கழித்து ரீமேக் செய்ய போவதாகவும்,பாக்கியராஜ் அவர்கள் இயக்குவதாகவும், அதில் பாக்கியராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாகவும், ஜே. எஸ். பி. சதீஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது முந்தானை முடிச்சு படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிய நிலையில் டுவிட்டரில் #37YearsOfMundhanaiMudichu என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, பலரதும் இதயத்தை வென்ற கே. பாக்கியராஜ் சாரின் முந்தானை முடிச்சு ரீமேக் செய்வதில் மகிழ்ச்சி என்றும் திரைகதையின் மாஸ்டரான பாக்கியராஜ் சார் நடித்த கதாபாத்திரத்தை மீண்டும் காண்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு ரீமேக்கிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், விரைவில் இதனை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago
சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago
“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago