முதன் முதலில் 5,000 ஆண்டுகளுக்கு முன் பிளேக் தொற்று ஏற்பட்ட நபரின் உடல் கண்டுபிடிப்பு..!

Published by
Sharmi

5,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் பிளேக் தொற்று ஏற்பட்ட நபரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பாவில் 1347 ஆம் ஆண்டு முதல் 1351 ஆம் ஆண்டு வரை கொடிய நோயான பிளேக் நோயால் பல லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர் என பிரிட்டானிக்கா இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தீவிர நோய்த்தொற்றால் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் பாதி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய நோய் பல நூற்றாண்டுகளாக பரவி வந்து அப்போது இருக்கும் மக்களை கொன்று குவித்துள்ளது.  ஐரோப்பாவில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் இந்த பிளேக் நோயால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சுமார் 5,000 வருடங்களுக்கு முன்னர் பிளேக் நோயால் உயிரிழந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் லாட்வியா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலில் பிளேக் நோய் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிளேக் நோயால் இறந்தவர்களில் இவர் மிக பழமையானவர் என்று தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் பால்டிக் பெருங்கடலில் கலக்கும் சலக் நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள மயானத்தில் 4 பேரின் உடலை கண்டெடுத்துள்ளனர். அந்த நால்வரின் எலும்புகள் மற்றும் பற்களை பரிசோதனை செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஏதும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை சோதித்துள்ளனர். அதில் ஒருவருக்கு அணில் போன்ற கொறிக்கும் பிராணியால் உருவான பிளேக் நோயின் திரிபு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த பாக்டீரியா, புபோனிக் பிளேக்காக மாற்றியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், கண்டுபிடிக்கப்பட்ட அந்த நபர் சுமார் 5,300 வருடங்கள் பழமை வாய்ந்தவர். அதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago