நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 34 லட்சம் வசூல் செய்துள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று வெளியானது. வெளியான முதல் நாளாகவே மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சிலர் கிளைமாக்ஸ் காட்சி சரியில்லை என்றும் சிலர் செல்வராகவன் மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது, வெளியான முதல் நாளில் சென்னையில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 34 லட்சம் வசூல் செய்துள்ளது.
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…
செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…