சூப்பர் ஸ்டாரை சந்தித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர்.!ஏன் தெரியுமா.?

Published by
Ragi

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.

ஆனால் அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .இதனால் கடந்த டிசம்பர் பாதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் நடிகர் ரஜினியை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .ஆம் தேசிங்கு பெரியசாமி தனது திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்றதுடன் படத்திற்கான கதையையும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ரஜினி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்காக தேசிங்கு பெரியசாமியை பாராட்டியதுடன் தனக்கும் ஒரு படத்திற்காக கதையை தயார் செய்யுமாறு கூறியதும் குறிப்பிடத்தக்கது.எனவே ரஜினியின் அடுத்த படத்தினை யார் இயக்குவார் என்ற சந்தேகம் ரசிகர்களைடையே எழுந்துள்ளது.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago