முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள தற்போது பிரிட்டனில் அதிக வேகத்துடன் பரவி வருவதாக பிரிட்டன் சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது. இந்த டெலடா வகை கொரோனா பல நாடுகளுக்கு பரவியிருப்பதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த டெல்டா வகை கொரோனா பிரிட்டனில் அதிக வீரியத்துடன் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த வியாழக்கிழமை வரையில் ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் புதிதாக 12,431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5,472 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. முதன் முதலாக பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை விட டெல்டா வகை கொரோனா மிக அதிகளவில் அருவி வருவதால், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…