இளையராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா அவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் செய்துள்ளார். 5 முறை தேசிய விருதையும், பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இளையராஜா அவர்களுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு அவர்கள் நடித்து முடித்துள்ள திரைப்படம் லாக்கப். ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இந்தப் படத்தினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு அவர்கள், தன்னுடைய பெரியப்பாவான இளையராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் பலர் இணைந்து இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…