நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாக்கி வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திருமணம் குறித்த தனது அபிப்பிராயம் குறித்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், திருமண முறையில் எனக்கு வேறு அபிப்பிராயம் இருந்தது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன். இதனால் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்றும் முடிவு செய்தேன். இப்போது அந்த எண்ணம் மாறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. சமூக வலைத்தள விவாதங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை விட்டு விலகி இருக்கிறேன்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…