குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது! பிரபல நடிகை அதிரடி!

Default Image
  • குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன்.
  • குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாக்கி வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திருமணம் குறித்த தனது அபிப்பிராயம் குறித்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், திருமண முறையில் எனக்கு வேறு அபிப்பிராயம் இருந்தது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன். இதனால் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்றும் முடிவு செய்தேன். இப்போது அந்த எண்ணம் மாறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. சமூக வலைத்தள விவாதங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை விட்டு விலகி இருக்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin