இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலியில் பரவி கொத்துக்கொத்தாக உயிரை கொன்று வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது. இதனால் அந்நாட்டு பிரதமர் இங்கு சவப்பெட்டிகள் இல்லை, புதைப்பதற்கு இடமில்லை என்று கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார். அந்த அளவுக்கு கொரோனா அந்நாட்டை ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையில் இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது.
உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,899 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,363 ஆகவும் உள்ளது. இத்தாலியில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவரச சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டமும் படிப்படியாக குறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…