#Shocking:பெரும் வெள்ளம்:சுமார் 341 பேர் பலி & இடிந்த வீடுகள் மற்றும் பள்ளிகள்!

Published by
Edison

தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பெய்து வரும் தொடர் மழையால் டர்பன் நகரம் உட்பட கிழக்கு குவாசுலு-நடால் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை சுமார் 341 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும்,ஏராளமான மக்கள் காணாமல் போனதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இடிந்த வீடுகள் – மின்சாரம் துண்டிப்பு:

மேலும்,கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள் மற்றும் பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,டர்பன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிக்கு ஏற்பட்ட சேதம் 52 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று எதெக்வினி மேயர் சோலோசி கவுண்டா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய பள்ளிகள் – மாணவர்கள் பலி:

அதுமட்டுமல்லாமல்,குறைந்தபட்சம் 120 பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,இதனால் 26 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 18 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஆங்கி மோட்சேக்க (Angie Motshekga) தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர்:

இதனைத் தொடர்ந்து,தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோசா, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி,சேதங்களை சரி செய்ய நிதியை விடுவிக்க முடிவு செய்துள்ளார்.அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

வெள்ளத்தில் முதலைகள்:

இதற்கிடையில்,டர்பனின் வடக்கே டோங்காட் பகுதியில் உள்ள பண்ணையில் இருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 14 முதலைகள்  மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தென்னாப்பிரிக்காவில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு! மா. கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கைது!  

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு! மா. கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கைது!

கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர்…

10 minutes ago

KKR vs RCB : ஆரம்பமே அரோகரா.!? முதல் போட்டி நடக்குமா.? வானிலை நிலவரம்…,

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…

14 minutes ago

அடுத்தடுத்து பயங்கரம்! காரைக்குடியில் ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை!

சிவகங்கை : தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள்என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ…

1 hour ago

மக்களே உஷார்! 331 ஆப்ஸ்-ஐ அதிரடியாக நீக்கிய கூகுள்! காரணம் தெரியுமா?

கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…

2 hours ago

“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!

சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…

3 hours ago

சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…

3 hours ago