உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்த நாள்…!

Published by
Rebekal

உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்த நாள் வரலாற்றில் இன்று.

சண்முகம் பிள்ளை மற்றும் அருணாச்சல வடிவு ஆகியோருக்கு நாகர்கோவில் உள்ள கேசவன்புதூரில் ஆகஸ்ட் 19ஆம் தேதி 1929ஆம் ஆண்டு பிறந்த மகன் தான் ச. அகத்தியலிங்கனார். இவர் தனது இளங்கலை அறிவியல் கணக்கு படிப்பை நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் பயின்று, முதுகலை தமிழ் இலக்கியத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்திலும் இவர் மற்றொரு முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

அதன் பின்பாக இவர் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சில காலம் இணை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்த் துறையில் முதன்மையானவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வரைந்துள்ளார்.

இவர் பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிஞராக பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்பும் தனது வீட்டில் இருந்தபடியே பல்வேறு ஆய்வுகளையும் செய்துள்ளார். இதன் காரணமாக  உலக நாடுகள் இவரை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளது. பின் ச.அகத்தியலிங்கம் அவர்கள் புதுச்சேரி அருகிலுள்ள கிளியனூர் காமராசர் குடியிருப்பின் அருகில் நடைபெற்ற மகிழுந்து விபத்தில் சிக்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி 2008 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்! 

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்!

டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…

11 minutes ago

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…

25 minutes ago

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் உறுப்பினர்கள்…

60 minutes ago

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…

1 hour ago

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சட்டப்பேரவையில் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர்!

சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…

2 hours ago

30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…

3 hours ago