பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வென்று காட்டிய நாள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஆண்கள் மட்டும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றினர். பெண்கள் வீட்டு வேலைகளை செய்வதற்காக முடக்கி வைத்திருந்தனர். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.  1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சமஉரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் மாநாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பலநாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளோமேரேசெர்கினே உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் பல்வேறு தடங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

மீண்டும் 1920-ம் ஆண்டு ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஷியாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் ஐ.நா பெண்கள் அமைப்பில் உலக முழுவதும் கொண்டாடும் விதமாக அறிவித்தது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago