ரிஷிகபூரின் மறைவு குறித்து அவரது மகள் ரித்திமா கபூர் தொடும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதி சடங்கில் மகளான ரித்திமா கபூரால் பங்கேற்க முடியவில்லை. இவரது மறைவுக்கு பல பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள் உட்பட பலர் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.
ஆம் டெல்லியில் வசித்து வரும் ரித்திமா ஊரடங்கு காரணமாக தனது தந்தையின் இறுதி சடங்கில் அவரால் பங்கேற்க இயலவில்லை. அவர் தனது தந்தையின் இறுதி சடங்கை வீடியோ கால் மூலம் கண்டு கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா ஐ லவ் யூ, நான் எப்போதும் உங்களை நேசிப்பேன். என் வலிமையான போர் வீரரின் ஆன்மா சாந்தியடையட்டும். நான் எப்போதும் உங்கள் மிஸ் செய்வேன். தினமும் உங்களது வீடியோ காலை மிஸ் செய்வேன். நான் உங்களை அனுப்பி வைக்க அங்கே இருந்திருக்க வேண்டும், மீண்டும் சந்திக்கும் வரை ஐ லவ் யூ அப்பா, உங்கள் முஷ்க் என்றென்றும் என்று பதிவிட்டு ரிஷிகபூருடன் அவர் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…