வணிகம்

10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்த மகள்…! இதன் பின்னணி என்ன?

Published by
லீனா

யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்துள்ளார். 

ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அந்த வீட்டுக்கு முறையாக வாடகை செலுத்தாத காரணத்தால், சில வாரங்களுக்கு முன் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  திறந்ததும் உறைந்து போன நிலையில் மனிதனின் சடலமொன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ஃப்ரீசரில் இருந்த சடலம் இவரின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து யூமி யோஷினோ கூறுகையில், தனது தாயாரின் பெயரில்தான் வீடு இருந்ததாகவும், அவர் உயிரிழந்தது தெரிந்தால் பிளாட்டை காலி செய்ய சொல்லி விடுவார்கள் என்ற பயத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ப்ரீசரில் மறைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், பிரேத பரிசோதனையும் செய்ய இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த போது அவரின் தாயாருக்கு 60 வயது இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago