இங்கிலாந்தில் ஊரடங்கை ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,181,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,83,868 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 1,493,416 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது.
இங்கிலாந்தில், கொரோனா தொற்றால் சுமார் 21,9,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 31,855 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் முன்னதாக ஊரடங்கை தளர்த்தினால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் பேர் பலியாக வாய்ப்புள்ளது அந்நாட்டின் அறிவியல் ஆலோசகர் கூறிய நிலையில்,இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…