தாயைக் கொலை செய்து நாயுடன் சாப்பிட்ட கொடூர மகன் ..!

Published by
murugan

ஸ்பெயினில் 28 வயதான ஒரு நபர் தனது தாயைக் கொன்று 1,000 துண்டுகளாக வெட்டியதாக வழக்கு விசாரணையில் உள்ளார். அவர் தனது தாயின் உடலை உணவு பெட்டியில் வைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆல்பர்டோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆல்பர்டோ-க்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆல்பர்டோ தாயார் மரியா சோலெடாட் 68 வயது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று போலீஸ் அதிகாரிகள் ஆல்பர்டோவின் வீட்டிற்கு வந்தபோது, என் அம்மா இங்கே இருக்கிறார். இறந்துவிட்டார். நானும் எனது நாயும் என் தாய் உடலை  சாப்பிடுகிறோம் என்று ஆல்பர்டோ கூறினார். அப்போது தன்னை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளிடம் ஆல்பர்டோ கூறுகையில், பதினைந்து நாட்களுக்கு மேலாக எனது தாயை தனது செல்ல நாயுடன் சாப்பிட்டு வருவதாக கூறினார்.

மரியாவின் உடல் குளிர்சாதன பெட்டியில் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆல்பர்டோக்கு அவரது தாய்க்கும் அடிக்கடி சன்டை வரும் என கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் ஆல்பர்டோ தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று ஆல்பர்டோ தனது தாயைக் கொல்லும்படி பல குரல்களைக் கேட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டிவி பார்க்கும் போது இந்த குரல்களைக் கேட்டதாக கூறினார். எவ்வாறாயினும், தனது தாயைத் தாக்கியதையோ, அவரை  வெட்டியதையோ, அல்லது அவரை சாப்பிட்டது எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்று அவர் கூறினார். இதனால் ஆல்பர்டோ மனநல பரிசோதனைக்கும் உட்பட்டுள்ளார். முடிவுகள் இன்னும் வரவில்லை.

Published by
murugan
Tags: spain

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

19 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

60 minutes ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

3 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

3 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

3 hours ago