கொரோனா தடுப்பூசி பணக்காரர்களுக்கு மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா மட்டும் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தால் அவை போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்று வாடிகன் தேவாலயத்தின் பொது மக்களிடம் உரையாற்றிய போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், கொரோனாவுக்கான தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலும் அது வருத்தப்பட வேண்டிய விஷயங்களாக இருக்கும் என்றும் கூறினார். எனவே பணக்காரர் என்றில்லாமல் கொரோனா தடுப்பூசி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக முழுவதையும் முழங்கால்களுக்கு அடியில் வைத்துள்ள இந்த கொரோனா வைரஸ் ஏழைகளின் கடினமான சூழ்திலையையும், உலகில் ஆட்சி செய்யும் பெரும் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…