ஈராக்கில் கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் உயிரிழப்பு.
வடக்கு ஈராக் மாவட்டமான ஜாகோவில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில், 25 வயதான சமையல்காரர் இஸா இஸ்மாயில் ஒரு பெரிய விருந்துக்காக உணவு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் ஒரு பெரிய பானையில் கோழி சூப்பை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர் தவறுதலாக கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்துள்ளார். இதில் அவர் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.
இஸ்மாயீலின் தந்தை இதுகுறித்து கூறுகையில், இஸ்மாயில் பல வருட அனுபவமுள்ள பயிற்சி பெற்ற சமையல்காரர் என்று கூறியுள்ளார். மேலும் அவரது உறவினர் கூறுகையில், இஸ்மாயில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு ஆறு மாத சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…