பாட்ஷா படத்தினை கைத்தட்டி ரசித்த குழந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி ரஜினி வாழ்த்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.. அவரது ஸ்டைலுக்கு என்றே ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு .அவரது சினிமா வாழ்க்கையில் வசூலில் அள்ளி குவித்த திரைப்படங்களில் ஒன்று பாட்ஷா . கடந்த 1995-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரும் மாணிக்கம் கேரக்டரிலும், பாட்சா கேரக்டரிலும் நடித்து மிரள வைத்திருப்பார்.
இதில் வரும் அனைத்து பாடல்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வசனமும் 25 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்றும் அனைவரிடத்திலும் ஒலித்து கொண்டிருக்கிறது . இந்த நிலையில் ரஜினியின் பாட்ஷா படத்தினை சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ரஜினி ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் ,கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ,கைவிட்டுடுவான் என்ற வசனம் பேசிய போது,அதனை பார்த்துகொண்டிருந்த குழந்தை கைத்தட்டி ரசித்தது .
அதனை குழந்தையின் பெற்றோர்கள் வீடியோ எடுத்து ரஜினிகாந்த் அவர்களின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமதுவுக்கு அனுப்பி வைக்க , அதற்கு ரஜினிகாந்த் குழந்தைக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும், நன்றி என்று குழந்தையின் பெற்றோருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளனர் . இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர் . அது மட்டுமின்றி இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…