மகாத்மா காந்தியின் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு முடிவு!

Default Image

மகாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் விரும்பத்தக்கவராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த இவர் உலக அளவில் முக்கிய தலைவராக கருதப்படும் வகையில், மகாத்மா காந்தி நினைவு கூறும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருவதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் இருப்பதாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் என்பதாலும் இந்த மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் பிரிட்டனில் உருவாக்கப்பட்டால் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கான உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்