இங்கிலாந்தில் 21 வயது பெண்ணுக்கு 5.8 கிலோ எடையுடன் பிறந்த மிகப் பெரிய குழந்தை!!

Default Image

இங்கிலாந்தில் 21 வயதுடைய பெண்மணி ஒருவருக்கு 5.8 கிலோ எடையுடன் மிக பெரிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

பொதுவாக குழந்தைகள் பிறப்பு என்பதே இவ்வுலகில் ஆண்டவன் படைப்பில் அதிசயமான ஒன்று தான். 10 மாதங்கள் வயிற்றில் என்ன குழந்தை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த கருவை தாய் அன்புடன் சுமந்து, தான் பிரசவிக்கும் பத்தாம் மாதத்திற்காக காத்திருந்து தனது குழந்தையை வலியுடன் பெற்றெடுத்து பார்க்கும் அந்த நாள் மிக பொக்கிஷமான ஒன்று. இவ்வாறு பிறக்க கூடிய குழந்தைகள் பலர் சில சமயங்களில் அதிக எடையுடன் அல்லது குறைவான எடையுடன் பிறப்பது அரிதாக நடக்கும்.

இவ்வாறு ஏற்கனவே இங்கிலாந்தில் அதிக எடையுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்து மிகப்பெரிய குழந்தை எனும் பெயர் பெற்றுள்ள நிலையில், தற்பொழுதும் 21 வயதுடைய தாய்க்கு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தை ஒன்று 5.8 கிலோ எடையுடன் மிக பெரியதாக பிறந்துள்ளது. மருத்துவர்கள் பிரசவத்திற்கு முன்பு இரட்டை குழந்தையோ என்றெல்லாம் ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண்மணியின் வயிறு பெரிதாக இருந்ததாம். ஆனால், ஒரு குழந்தையே 5.8 கிலோ எடையுடன் பிறந்துள்ளது அங்கிருந்த பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்