சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு …. காளான் ஊத்தப்பம்!

Published by
Rebekal

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் பலர் எனக்கு சக்கரை நோய் உள்ளது என்று சொல்லுகிறார்கள். இந்த சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என மருத்துவர் சொன்னாலும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது சிலருக்கு தெரிவதில்லை. அதிலும் 2045 ஆம் ஆண்டில் 20 நபர்களில் பத்து பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

எனவே, இந்த சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயில் இருந்து விடுபடுவதற்கும் நாம் உணவு வகைகள் மூலமாக மருந்து எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறு இந்த நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலை நேரத்தில் காளான் ஊத்தப்பம் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்த காலை உணவாக இருக்கும்.

மேலும், சர்க்கரை நோயாளிகள் காலை நேர உணவை தவிர்க்கும் போது இரத்த சர்க்கரை அளவு மிக குறைந்து விடும். எனவே காலை நேர உணவை சரியாக உட்கொள்ள வேண்டும். இதுதான் உடலுக்கு ஆற்றல் வழங்கக்கூடியது. இன்று நாம் காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காளான் ஊத்தப்பம் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • காளான்
  • தோசை மாவு
  • குடைமிளகாய்
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • கரம் மசாலா
  • எண்ணெய்

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதன் பின்பு குடைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் இதனுடன் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து லேசாக கிளறி விட்டு பச்சை வாடை அடங்கியதும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

ஆனால் காளான் முழுவதுமாக  வெந்து விடக்கூடாது. அதன் பின்னர் தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவி மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைத்து பின் மீண்டும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடவும். அட்டகாசமான காளான் ஊத்தப்பம் வீட்டிலேயே தயார். நிச்சயம் சர்க்கரை நோயாளிகளுக்கு இதை செய்து கொடுங்கள். இதில் பல சத்துக்களும் அடங்கியுள்ளது, எனவே காலையில் இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

Published by
Rebekal

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

4 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

8 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

8 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

9 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

10 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

10 hours ago