முடி உதிர்வை தடுக்கும் பெரியநெல்லிக்காயின் அற்புதமான குணங்கள்….!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிக முக்கியமான பிரச்சனையே முடி உதிர்வு தான். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தாலும், அதில் தீர்வு கிடைக்காமல் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் பல பக்க விளைவுகளும் ஏற்பட கூடும்.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். இதற்க்கு பெரிய நெல்லிக்காய் மற்றும் காற்றாலை போன்ற இயற்கையான மூலிகை பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
- காற்றாழை ஜெல் – 1/4
- பெரிய நெல்லிக்காய் சாறு – 3/4
- தேங்காய் எண்ணெய் – 1 கப்
தயாரிக்கும் முறை :
காற்றாழை ஜெல் :
காற்றாழை ஜெல் தயாரிக்க ஒரு கீறு காற்றாழை துண்டை எடுத்து, அதன் தோலை சீவி அதனை நன்கு கழுவி, பின் மீக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பெரிய நெல்லிக்காய் சாறு :
5 பெரிய நெல்லிக்காயை எடுத்து, நன்கு கழுவி அதன் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுத்து மிக்சியில் அரைத்து எடுத்து, அதனை வெள்ளை துணி ஒன்றில் போட்டு பிழிந்து சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 3/4 கப் நெல்லிக்காய் சாறு, 1/4 கப் காற்றாழை ஜெல் இரண்டையும் கலந்து அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கொள்ள வேண்டும். பின் ஒரு கப் தேங்காய் எண்ணெயை ஊற்றி 15-20 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஈர தன்மை காய்ந்த பின் எண்ணெயை வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்த பின், அதிலிருந்து 2 கரண்டி எண்ணெயை எடுத்து இரண்டு கரண்டி ஆமணக்கு எண்ணெயை கலந்து, முடியின் வேர்க்கால்களில் பூச வேண்டும், மிக விரைவில் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காணலாம்.