ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது. அந்த போட்டியில் 60 வயதுடைய பெண் ஒருவர் அதில் கலந்துகொண்டார். அப்போது ஆஸ்திரேலியாவின் பிரபலமான லேமிங்டன் கேக்கை அவர் சாப்பிட்ட சில நிமிடத்தில் உணர்ச்சியற்ற நிலையை அடைந்தார் என தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, லேமிங்டன் என்னும் கேக் வெண்ணெய்யால் செய்யப்பட்டு சாக்லேட் சாஸால் கோட்டிங் செய்யப்பட்டு உலர்ந்த தேங்காய் துருவல் தூவப்பட்டிருக்கும்.
இந்த சம்பவம் நடக்கும் முன் லேமிங்டன் கேக்கை போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிடுவது படம் பிடிக்கப்பட்டது. பின்னர் உயிரிழந்த பெண் அசௌகரியங்களை உணரும் முன்பு, போட்டி நடைபெற்ற இடத்தில் இருந்த கேக்கை எடுத்து சாப்பிட்டார் என நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அந்த காணொளியில் சம்பவம் நடக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரும் போட்டியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். போட்டியாளர்களுக்கு முன் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஹெர்வே ஹோட்டல் சார்பில் பேஸ்புக்கில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் இந்த சம்பவம் நிகழ்ந்த போது ஆம்புலன்ஸின் சேவைக்காக நன்றியும் தெரிவித்திருந்தனர். பின்னர் இந்த ஆஸ்திரேலியா நாளுக்காக கேக் உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவது அங்கு மிகவும் பிரபலமாகும். முதல் முறையாக ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததை குறிக்கும் விதமாக இந்த ஆஸ்திரேலியா நாள் அங்கு கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் லேமிங்டன் கேக், பைஸ், ஹாட் டாக் போன்ற உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட்டு போட்டியாளர்கள் இதில் பரிசுகளை வெல்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…