உடன்பிறப்பே திரைப்படத்தை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார்.
அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக நேரடியாக இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இதில், “உடன்பிறப்பே படத்தின் இயக்குநர் இரா.சரவணன் அண்ணனின் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் சூர்யா சார், சசிகுமார் சார், ஜோதிகா மேடம், சூரி அண்ணா மற்றும் உடன்பிறப்பே படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சசிகுமார் தங்களின் நம்பிக்கைக்கு நன்றி வெல்வோம்” என்று நன்றியை தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…