விஜய்க்கு நன்றி! ஜன.13ம் தேதி திரைக்கு வருது மாஸ்டர்! – திருப்பூர் சுப்பிரமணியம்

Default Image

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் தயாராகி 10 மாதங்கள் ஆகியும் ஓ.டி.டி.யில் வெளியிடாமல், திரையரங்கில் திரையிட ஒத்துழைப்பு வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் அதிகாரப் பூர்வமாக தெரிவித்ததாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தை பொங்கலுக்காக ஜனவரி 13ல் வெளியிட திட்டமிட்ட நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் முதல்வர் வீட்டில் விஜய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாஸ்டர் படம் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழு சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்