ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவருக்கும் பெரிய வெற்றியை பெற்று தந்த திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படம் மூலம் ஜெயம்ரவிக்கு தமிழ் திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல ரீமேக் இயக்குனர் என பெயரெடுத்து இருந்த ஜெயம் ராஜா இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். அரவிந்த் சாமிக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின.
தனி ஒருவன் 2 திரைப்படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகும் என கூறப்பட்டு வந்தது. ஜெயம் ராஜாவும் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினார். அந்த நேரத்தில், விஜயுடன் ஒரு படம் இயக்குவதாக பேசப்பட்டது.. அதனால் தனிஒருவன் தள்ளிப்போனது.
அதனால், ஜெயம் ரவியும் கோமாளி, இயக்குனர் லக்ஷ்மன் படம், இயக்குனர் அகமது படம் என பிஸியானார். இதில், இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வருகிறது. அதனால், தனி ஒருவன் 2 திரைப்படம் ஜெயம் ரவியின் 27 வது படமாக உருவாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்குள் ஜெயம் ராஜா விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தகவல் என்னவென்றால் தனி ஒருவன் 2 படத்தை கோமாளி பட தயாரிப்பாளர் தான் தயாரிக்க உள்ளாராம். ஆனால் தனி ஒருவன் தலைப்பு ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் தான் இருக்கிறதாம். பெரிய பெயர் கொடுத்த அந்த தலைப்பை விட்டு கொடுப்பார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…