தலைவி பட நடிகையான கங்கனா ரணாவத் ராமர் கோவில் வழக்கை அடிப்படையாக கொண்டு படத்தை இயக்கி தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ராமர் கோயில் வழக்கை மையமாக கொண்டு உருவாகவுள்ள ‘அபரஜிதா அயோத்யா’ என்ற படத்தினை இயக்கி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், முதலில் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை, மிகவும் பிஸியாக இருந்ததால் அதனை பற்றி யோசிக்கவில்லை என்றும், இந்த படத்தை நான் தயாரித்து விட்டு வேறொருவரை வைத்து இயக்க நினைத்திருந்தேன். ஆனால் எனது நண்பர்கள் இந்த படத்தை நான் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்கும் அது சரியாக தோன்றியதால் இந்த படத்தை நானே இயக்கி தயாரிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நான் நடிக்காமல், இயக்குநராக மட்டுமே முழு கவனமும் செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மணிகர்னிகா:தி குயின் ஆஃப் ஜான்சி என்ற ராணி லட்சுமி பாயின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஜான்சி ராணியாக நடித்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…