சோமாலியா ராணுவத் தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 24 பயங்கரவாதிகள் கொலை!

Default Image

சோமாலியாவில் இராணுவ தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இதற்க்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் தாக்குதலில் 24 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் அதிக அளவில் சோமாலியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை தான் அதிக அளவில் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள்.  இந்நிலையில், சோமாலியாவின் தெற்குப் பகுதி அமைந்துள்ள ராணுவத்தின் மீது தற்போது  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் ராணுவத் தளத்தை சுற்றிவளைத்து நிலையில் ராணுவ வீரர்கள் விரைவாக செயல்பட்டு இந்த தாக்குதலை முறியடித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களும் ராணுவ வீரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan