உக்ரைன் மீது கடந்த சில நாட்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,முக்கிய நகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.
இதனையடுத்து,அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன்காரணமாக,அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு:
குறிப்பாக குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் மரியபோல் நகரில் ரஷ்ய விமானப்படைகள் கடும் தாக்குதல் நடத்தியதாக அதன் நகர துணைமேயர் தெரிவித்துள்ளார்.
1000-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களின் கதி என்ன?
இந்நிலையில்,உக்ரைனில் மரியபோல் நகரில் 1000-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கில் ரஷ்யா குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால்,இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
உணவு வாங்கும்போது நேர்ந்த சோகம்:
அதைபோல்,உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிகிவ் பகுதியில் உணவு வாங்க பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்த பகுதியில் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…