தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் “டான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரத்தில் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனரான அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகவு ள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…