வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓம் பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களது செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செய்திகள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இந்த முடக்கம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில் 6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு சுமார் ரூ.45,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்ததாகவும், மிகப்பெரிய செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட வருவாய் கிட்டத்தட்ட $ 6 பில்லியனுக்கும் அதிகமாக சரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எங்களது குழுவின் உழைப்பை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சுமார் 7 கோடி புதிய பயனர்களை பெற்றுள்ளோம். அதிக பயனர்களை ஒரே நேரத்தில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் செயலியின் செயல்பாட்டில் வேகம் குறைந்து காணப்பட்டது என்று கூறினார்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…