தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பல்வேறு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ள நிவாரண நிதி திரட்டி வரக்கூடிய நிலையில், திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வரும் நிலையில் சிரஞ்சீவியும் மகேஷ்பாபுவும் ஒரு கோடி ரூபாயை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். இதுதவிர பல்வேறு நடிகர்களும் லட்சக்கணக்கில் தங்களால் முடிந்த நிதிகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…