கணினியை தாக்கி செயலிலக்க வைக்கும் கொரோனா வைரஸ்… புதிய அவதாரத்தால் உலக மக்கள் உச்ச கட்ட குழப்பம்…

Default Image
  • மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது கணினியையும் தாக்கி வருகிறது.
  • புதிய தகவலால் உலக நாடுகளிடையே புதிய பீதி.
     சீனாவில் மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸ் வேகமாக  பரவக்கூடாது என்பதில் அனைத்து  நாடுகளும்  தீவிரமாக  முயற்ச்சி  எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி  கணினிகளையும் தாக்கும் என்று பொறியியல் வல்லுநர்கள்  புதிய தகவல்களை தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக கஸ் பெர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள், கணினிகளில்  உள்ள கோப்புகளில் தங்கி தீங்கிழைக்கும் கொரோனா வைரசை இவர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.
Related image
இது
  • பி.டி.எப்.,
  • எம்.பி.4
  •  டாக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாமல் கணினிகளையும் தாக்குகிறது. ஆனால் இந்த வைரஸ்களை ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தி உள்ளனர். தற்போது வரை நாங்கள் 10 வைரஸ் பைல்களை பார்த்துள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பைல்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம் மேலும், இந்த கொரோனா வைரஸ் போலியான கோப்புகள்  மூலம் மறைந்து பரவும் என்றனர். ஏற்கனவே மனிதர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்திவரும் இந்த கொரோனா வைரஸ் தற்போது ஒரு புதிய தலைவலியாக கணினியில் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services