தற்போது இந்திய சந்தையில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கி அதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனம் அதன் முதல் மின்சார எஸ்யுவியை அறிமுகம் செய்ய தற்போது தயாராகிவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் இவி என்ற தனது முதல் மின்சார எஸ்யுவியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது.நெக்ஸான் பேஸ்லிஃப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டே இந்த நெக்ஸான் இவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் இந்த மின்சார கார்கள் விற்பனைக்கு வர தயாராக உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த கார்கள் நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, புனே, பெங்களூரு, அகமதாபாத், புதுடெல்லி, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பிற நகரங்களுக்கு விற்பனை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…