கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாராகும் பெரிய கோவில்..இன்று யாகசாலை பூஜை..!

Published by
kavitha
  • பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கொண்டாட்டம் தீவிரம்
  • இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.

 

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள்  நடைபெற்று வருகிறது.

நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு வேதிகை அமைக்கும் பணிகளில் 300 சிவாச்சாரியார்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் கோவிலின் விமான கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது, நேற்று வரகு தானியம் போன்றவைகள் நிரப்பி தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்களை கோபுரத்தில் பொருத்தும் பணியானது நடைபெற்றது. நேற்று காலை வெண்ணாற்றில் இருந்து புனித காவிரி நீரானது கலசங்களில் யானை மீது வைத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக வந்தனர்.

Image result for தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு"

இந்த நிகழ்வின் போது ஏராளமான பெண்கள் முளப்பாரி எடுத்தும் ஓதுவார்கள் தேவாரம் மற்றும் திருவாசகம், திருப்பன்னிசை முழங்க வந்தனர்.

யானை மீது எடுத்து வரப்பட்ட புனித நீர் குடங்களை  கோவிலினுள் உள்ளே வைத்து யாக பூஜைகள் தொடங்கியது.இந்த பூஜைகள் அனைத்தும் கோவிலின் பின்புறம் உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருக்கக்கூடிய மண்டபத்தில் 110 புனித நீர் குடங்களுக்கு இன்று பூஜைகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று  முதல் குடமுழுக்கு நாளான 5- ந் தேதி வரை 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஓதுவார்கள்  தமிழில் திருமறைப்படியும் மற்றும் சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படியும் மேலும் சாஸ்திரிகள் வேத முறைப்படியும் பூஜையை நடத்துவார்கள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கான அதிநவீன சுழல் மேஜை ஊர்தி கொண்டு வரப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னர்  நடைபெறும் குடமுழுக்கு  என்பதால் விழாவிற்கு சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனது குறிப்பிடத்தக்கது.ள்ளன.

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

28 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

2 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago