கூடைபந்து போட்டியில் தமிழக அணி வெற்றி

Default Image

தமிழ்நாடு கூடைபந்து சார்பில் தற்போது 16 வயதுக்கு உட்டபட்ட பிரிவினருக்கு கூடைபந்து போட்டியை தேசிய அளவில்  கோவையில் நடத்தி வருகிறது.இந்த போட்டியில் டெல்லி ,அரியானா ,கேரளா ,கர்நாடகா,தமிழ்நாடு,மராட்டியம், உத்தரபிரதேசம், தெலுங்கானா சண்டிகார்,ராஜஸ்தான்,பஞ்சாப் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியானது ஆண்கள் பிரிவில்  தலா 25 அணிகளும் , பெண்கள் பிரிவில் 24 அணிகளும் மோதிக் கொண்டன.இதில் ஆண்கள் பிரிவில் முதல் ஆட்ட முடிவில் கேரளா அணி 70-40 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.மற்றொரு ஆட்ட முடிவில்  ராஜஸ்தான் அணியானது 68-56 என்ற புள்ளி கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது.அதே போல் மற்றும் ஒரு ஆட்டத்தில் தெலுங்கானா அணி 62-41 என்ற புள்ளி கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.

பெண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்ட நேர முடிவில் அரியானா அணி 72-40 என்ற புள்ளி கணக்கில் சண்டிகார் அணியை பதம்  பார்த்தது.இதன் பின்னர் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணியானது  68-31 என்ற புள்ளி கணக்கில் சத்தீஷ்கார் அணியை வீழ்த்தியது.பின்னர் களமிறங்கிய போட்டியை நடத்தும் தமிழக அணி 52-36 என்ற புள்ளி கணக்கில் கர்நாடாகாவை வீழ்த்தியது.

ஆண்கள் பிரிவில் டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு ,ராஜஸ்தான், கர்நாடகம், கேரளா, , உத்தரபிரதேசம், சண்டிகார்  ,அரியானா, பஞ்சாப்  ஆகிய அணிகள் வெற்றி பெற்ற அணிகள் உள்பட பெண்கள் பிரிவிலும்  ராஜஸ்தான், டெல்லி,  பஞ்சாப், கர்நாடகம், உத்தரபிரதேசம், சண்டிகார், கேரளா, மராட்டியம், தமிழ்நாடு,அரியானா ஆகிய அணிகள்  கால் இறுதிக்கு முன் உள்ள   சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்