தமிழிசைக்கு மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம்!

Default Image

மக்கள் நீதி மய்யம் , பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளது.

இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்பப்படும்’ என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தங்கள் இணையதளத்தில் செல்போன் எண், இமெயில் மற்றும் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட விவரங்களை அளித்து தமிழிசை பதிவு செய்ததற்கான புகைப்பட ஆதாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,“ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்துகொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை … பதிவு செய்தமைக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹெச்.ராஜாவின் அட்மின் ஃபேஸ்புக் பதிவைப் போல் ஒருவேளை இதுவும் தமிழிசையின் அட்மின் கமல் கட்சியில் இணைவதற்காகப் பதிவு செய்திருப்பாரே? என்று கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்