தமிழக வீரருக்கு இடமில்லையா – ஆர்.ஜே.பாலாஜி கொந்தளிப்பு

Published by
Venu

சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் அபினவ் முகுந்திற்கு இந்திய அணியில் இடம் இல்லையா என்று நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி கொந்தளித்துள்ளார்.
அபினவ் முகுந்த் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர்  இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி 320 ரன்களை அடித்துள்ளார்.மேலும்  2 அரை சதங்கள் அடித்துள்ளார்.அபினவ் கடைசியாக 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு  எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியின்  2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த வருடம் நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணிக்காக  12 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் அடித்துள்ளார் .அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் இவருக்குத்தான் . கடந்த ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் 9 போட்டிகளில் விளையாடி 560 ரன்கள் எடுத்தார் .

ஆனால் அபினவ் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் 50 மற்றும் 100 ரன்கள் அடித்தால் அந்த வீரர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம்.ஆனால் விஜய் ஹசரே  போட்டியில் அபினவ் முகுந்த் 3 முறை தலா 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.இந்தாண்டு நடைபெற்ற சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவர்தான்.இந்திய அணிக்கு அவர் தேர்வாகவில்லை என்றால் கூட பரவாயில்லை,தியோதர் கோப்பை போட்டியில் கூட அவர் தேர்வாகவில்லை.
இந்திய அணிக்காக  முகுந்த் கடைசியாக விளையாடிய இலங்கையுடன் விளையாடியபோது  81 ரன்கள் அடித்தார் .இதன் பிறகு இந்திய அணிக்கு அவர் தேர்வாகவே இல்லை.அவர் 81 ரன்கள் எடுத்த பிறகு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு 29 வயதுதான் ஆகின்றது. தொடர்ந்து விளையாடி போராடுங்கள் முகுந்த் என்று பதிவிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
 

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

3 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

4 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

6 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

7 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

7 hours ago