தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் மன அழுத்தம் காரணமாக தன்னையே மாய்த்துக் கொள்வதை போன்று சுஷாந்த் சிங்கும் செய்திருக்கலாம் என்று பிரபல எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து சுஷாந்த் சிங்கின் நெருக்கமானவரும் எழுத்தாளருமான சுகரித்தா செங்குப்தா கூறியதாவது ,சுஷாந்த் சிங் கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும் ,அதானாலயே அவரது காதலியான ரேஹா விலகியதாகவும் கூறியுள்ளார்.இவர் மனசோர்வு காரணமாக டாக்டரை சந்தித்து மருந்துகள் வாங்கினாலும் அதை எடுத்து கொள்ள மாட்டார்.பலர் வற்புறுத்திய பின்னரும் அவர் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.இதனால் மன அழுத்தம் அதிகரித்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் ,அவரது காதலியான ரேஹா மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் பல குரல்கள் கேட்க தொடங்கியதன் காரணமாக,தன் மனைவியை தானே கொலை செய்து விடுவேனோ என்ற பயத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொள்வார்.அந்த படத்தில் காட்டப்பட்டதை போன்று அவருக்கும் நிறைய குரல்கள் தன்னை சுற்றி கேட்டதாகவும் ,அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சுகரித்தா கூறியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…