சுஷாந்த் சிங் வீட்டில் அடுத்த சோகம்.!

Default Image

சுஷாந்த் இறந்த செய்தியை கேட்டு , அவரின் சகோதரரின் மனைவி சோகத்தில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . 

 

இந்நிலையில், நேற்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், அடுத்த இழப்பை அந்த குடும்பம் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சுஷாந்த் சிங்கின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர் சுஷாந்த் இறந்த செய்தியை கேட்டதிலிருந்து உணவு உட்கொள்வதை தவிர்த்து விட்டதாகவும், அதனையடுத்து திங்களன்று மும்பையில் சுஷாந்த் அவர்களின் இறுதி சடங்கு நடைபெற்று கொண்டிருந்த அதே சமயத்தில் , அவரின் அண்ணி அவரது சொந்த ஊரான பீகாரில் உள்ள பூர்ணியாவில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்