நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து காதலியிடம் 9 மணி நேரம் வரை விசாரணை.!

Published by
Ragi

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அறிய அவரது சமூக ஊடக கணக்குகளை ஸ்கேன் செய்தும் , உளவியல் பிரேத பரிசோதனை செய்தும் , சுமார் 9 மணி நேரம் வரை காதலியான ரியா சக்கரவர்த்தியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று அவரது நண்பர்கள் பலரிடம் விசாரணை நடத்திய போது ,அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து யாருக்கும் அதிகம் தெரியாது என்று கூறியதாக பந்த்ரா போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.இந்த நிலையில் மும்பை போலீஸிலுள்ள சைபர் செல் சுஷாந்த் சிங் மரணத்திலுள்ள மர்மத்தை கண்டுபிடிக்க புது முயற்சி ஒன்றை கையாளுகின்றனர்.

அதாவது மறைந்த சுஷாந்த் சிங்கின் சமூக ஊடக பக்கங்களை ஸ்கேன் செய்து,அவர் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த பதிவுகளையும் , ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் அளித்த உரையாடல்களையும் ,யூடுயூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளையும் பார்த்து படித்து வருவதாக கூறியுள்ளனர்.அவ்வாறு ஒரு பதிவில் ரசிகர் ஒருவரிடம் அவர் கூறியதாவது , எனக்கு சினிமாயுலகில் காட்பாதர் என்று யாரும் இல்லை என்று கூறியதோடு ,தனது படத்தை பார்க்குமாறு வற்புறுத்தி உள்ளார்.இல்லையென்றால் தனது இடத்தை மற்ற சிலர் ஆக்கிரமிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மும்பையில் உள்ள எல்.எச்.ஹிராந்தினி மருத்துவமனையின் மனநல மருத்துவரான ஹரிஷ் ஷெட்டி கூறுகையில், சமூக ஊடகங்களை ஸ்கேன் செய்வது எவ்வளவு முக்கியமோ ,அதை போன்று இதை போன்ற வழக்கில் உளவியல் பிரேத பரிசோதனையும் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.அதாவது இறந்த ஒருவரின் மருத்துவ மற்றும் மனநல அறிக்கைகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவரது சிறுவயது முதல் தற்கொலை செய்த கொண்ட நாள் வரையிலான வாழ்க்கையை பயணத்தை உள்ளடக்கியது.இதன் மூலம் அவரது உறவினர்களையும் , நெருங்கிய நண்பர்களையும் சந்திக்கும் செயல்முறை.எனவே அவரது மரணத்தின் பின்னணியை கண்டறிய சுஷாந்த் சிங்கின் உளவியல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

அதன்படி அவரது காதலியான ரியா சக்கரவர்த்தியை மும்பை போலீசார் சுமார் 9 மணி நேரம் வரை விசாரணை செய்ததை அடுத்து,அவர் ஜூன் 6ம் தேதி இருந்ததால் தன்னை தனியாக விடும்படி கேட்டுக் கொண்டதாக ரியா கூறியுள்ளார்.இவர்கள் இருவரும் ரொமான்ஸ் படத்தின் போது சந்தித்து,அதன் பின்னர் பல படங்களில் இணைந்து பணியாற்றி காதல் செய்ததாகவும் கூறினார்.மேலும் அவர் மன அழுத்தம் காரணமாக தன்னை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி பூனாவிலுள்ள அவரது பண்ணை வீட்டில் தங்குவார் என்றும் ,மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர் மருத்துவரிடம் அணுகி மருந்துகளை உட்கொள்ள தொடங்கி , அதன் பின்னர் சில நாட்கள் மருந்து எடுப்பதை நிறுத்தி விட்டதாகவும் கூறினார்.மேலும் மும்பை போலீசார் பலரை விசாரணை நடத்தி வருவதோடு சுஷாந்த் சிங்கின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த மும்பையில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அதற்கான ஆவணங்களை வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

7 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

8 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

8 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

9 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

9 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

10 hours ago