சுஷாந்த் சிங்கின் மரணத்தை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்.!

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தாங்க முடியாமல் , அவரின் தீவிர ரசிகரான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் சுஷாந்த் சிங் இறந்த செய்தியை கேட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகரான அந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவரின் மரணத்தை தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த செய்தி தற்போது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்